mercredi 25 mars 2009
ஒற்றைத் தலைவலி
Publié par kajaneethan à 05:13 0 commentaires
dimanche 21 décembre 2008
samedi 20 décembre 2008
இணையத்தள உபயோகம் மூளையின் செயல்திறனை ஊக்குவிக்கிறது அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்
Publié par kajaneethan à 14:38 0 commentaires
எடை குறைப்பு மாத்திரைகளால் உயிருக்கு ஆபத்து
Publié par kajaneethan à 14:29 0 commentaires
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம்!
Publié par kajaneethan à 14:21 1 commentaires
தற்கொலைக்கும் மரபணு சார்ந்த இரசாயனத் தொழிற்பாட்டுக்கும் தொடர்பு
Publié par kajaneethan à 14:09 0 commentaires
புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
Publié par kajaneethan à 14:04 0 commentaires
சிறுவர்களில் மூளைப் புற்றுநோயை தோற்றுவிக்கும் மரபணு அலகு கண்டுபிடிப்பு
Publié par kajaneethan à 13:57 0 commentaires
பெண்களின் கைகள் சுத்தமில்லை-அமெரிக்க ஆய்வின் தகவல்
Publié par kajaneethan à 13:50 0 commentaires
தூக்கம் குறைவதால் புற்றுநோய் வாய்ப்பு?
Publié par kajaneethan à 13:45 0 commentaires
இதய வடிவத்தை மாற்றும் சிகரெட் புகை!
Publié par kajaneethan à 13:41 0 commentaires
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின்-சி
Publié par kajaneethan à 13:36 0 commentaires
தினமும் முட்டை சாப்பிடுபவரா நீங்கள்?
அன்றாடம் ஒரு முட்டையை சாப்பிடுவோர் பலர் உண்டு. தினமும் ஒரு முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு 2 முட்டை சாப்பிட்டால் கூட அது அவர்களின் சர்க்கரை நோய் பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.தினமும் ஒரு முட்டை உண்பது சர்க்கரை நோயாளிகளின் உடல்நலத்திற்கு சிறந்தது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வைப் பின்பற்றி ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அதில் டைப் 2 டயபடிஸ் நோய் ஏற்படும் வாய்ப்பும், இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை பராமரிப்பதிலும் முட்டையின் பங்கு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வின்படி தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 60 விழுக்காடு அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிலும் பெண்கள் தினமும் ஒரு முட்டை அல்லது வாரத்திற்கு 7-க்கும் அதிகமான அளவு முட்டைகளைச் சாப்பிட்டால், சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் 77 விழுக்காடு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.அதே நேரத்தில் வாரத்திற்கு ஒரு முட்டை சாப்பிடலாம் என்றும், இதனால் பெரிய அளவில் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படாது என்றும் ஆய்வை மேற்கொண்ட டாக்டர் மைக்கேல் தெரிவித்துள்ளார்.ஆண்கள் மற்றும் பெண்கள் 57 ஆயிரம் பேரிடம் முட்டை சாப்பிடும் பழக்கம் குறித்து சுமார் 20 ஆண்டுகள் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
Publié par kajaneethan à 13:27 0 commentaires
உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் டென்ஷன்-மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
மனிதர்களுக்கு ஏற்படும் டென்ஷன்,மன அழுத்தத்தால் ஏற்படும் அபாயம் குறித்து கனடாவில் உள்ள டொராண்டோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.அதில் பல்வேறு பயனுள்ள தகவல்கள் கிடைத்துள்ளன.மனிதர்களுக்கு பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது,மன அழுத்தம் தான் சர்க்கரை வியாதி,இருதய பாதிப்பு உள்பட பல நோய்களுக்கு முக்கிய காரணம்.எனவே டென்ஷன்,மற்றும் மன அழுத்தம் ஏற்படாத வகையில் இருப்பது நல்லது.சிறிய விஷயம் கூட ஒருவரை பாதித்து மன அழுத்தம் ஏற்படலாம்.குறிப்பாக ஒரு பிரச்சினையில் என்ன முடிவு ஏற்படுமோ?என்ற எதிர்பார்ப்பு தான் மன அழுத்தத்துக்கு அறிகுறி.ஒரு விவகாரத்தில் சாதகமாகவோ,பாதகமாகவோ முடிவு ஏற்பட்டால் பெரிய அளவில் மன அழுத்தம் ஏற்படாது.ஆனால் எதிர்பார்ப்புக்கும்,ஏமாற்றத்துக்கும் இடையே உள்ள வாழ்க்கையில் தான் அதிக மன அழுத்தம் ஏற்படும்.அந்த பிரச்சினையின் முடிவு நிச்சயமற்ற நிலையில் இருக்கும் போது மூளையில் அது தொடர்பான பாதிவுகள் அதிகமாகி மன அழுத்தம்,டென்ஷன் கூடிவிடும்.பிரச்சினையின் முடிவில் சாதகமான சூழ்நிலை அமைந்தால் மன அழுத்தம் குறைந்து விடுகிறது.மாறாக பாதகமாக அமைந்தால் அதிகமான மன அழுத்தம் உருவாகி தீமை ஏற்படுகிறது.எனவே எந்த பிரச்சினை குறித்தும்,அதிக எதிர்பார்ப்பு,பயம் இல்லாமல் இருக்க வேண்டும்.எதிர்பார்ப்பு வீணாகி விட்டதே என்று நினைப்பவர்களுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
Publié par kajaneethan à 13:21 0 commentaires
குடிகாரர்களுக்கு புதிய ஆபத்து-கண் பார்வை பாதிக்கும்
Publié par kajaneethan à 13:19 0 commentaires
குண்டானால் கருச்சிதைவு ஏற்படும்
Publié par kajaneethan à 12:44 0 commentaires
கருவுற்ற பெண்கள் காபி அதிகம் அருந்த வேண்டாம்
கருவுற்ற பெண்கள் காபி அதிகம் அருந்த வேண்டாம்!
கர்ப்பமாக உள்ள பெண்கள் நாளொன்றுக்கு இரண்டு சிறிய கோப்பை அளவுக்கு மேல் காபி அருந்த வேண்டாம் என்றும் அதிகமாக காபி அருந்தினால் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கும் என்றும் பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காபி அருந்தும் கருத்தரித்த பெண்கள், எடை குறைவான குழந்தைகளை பெற்றெடுப்பதாக தெரிவித்துள்ளதோடு, பின்னால் இந்த குழந்தைகள் வளரும்போது சிக்கல்கள் ஏற்படுவதாகவும், சில குழந்தைகள் விரைவில் இறந்து போவதாகவும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.சுமார் 2,500 கருவுற்ற பெண்களிடம் கேள்வித்தாள்கள் கொடுத்து பதிலளிக்குமாறு செய்து ஆய்வு மேற்கொண்டனர். அதாவது குறிப்பாக இதில் அவர்கள் நாளொன்றுக்கு அருந்தும் காபியின் அளவு பற்றி விவரம் கோரப்பட்டது.இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ், லெய்செஸ்டர் பல்கலைக் கழகங்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வின் விவரங்கள் "பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலில்" வெளியிடப்படவுள்ளது.சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து வெளியிடப்ப்ட்ட ஒரு ஆய்வு முடிவும் கருவுற்ற பெண்கள் நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காபி எடுத்துக் கொண்டால் ஏற்படும் தீய விளைவுகளை வெளியிட்டிருந்தது.கருத்தரித்த முதல் 12 வாரங்களுக்கு பெண்கள் காஃபைனிலிருந்து விலகி இருப்பது நல்லது. ஏனெனில் இந்த காலக்கட்டங்களில்தான் கருச்சிதைவு சாத்தியங்கள் அதிகம் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்
Publié par kajaneethan à 12:37 0 commentaires
இளமையில் வறுமை கொடுமை மட்டுமன்றி மூளையின் செயற்திறனையும் பாதிக்கிறது
அமெரிக்காவில் வசதி படைத்த சூழலில் வளரும் மற்றும் வறுமைச் சூழலில் வளரும் குழந்தைகளிடத்தே நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து வறுமைச் சூழலில் நிலவும் அழுத்தங்கள் மத்தியில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாடு வசதி படைத்த சூழலில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாட்டினின்றும் வேறுபட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.வறுமைச் சூழலில் வளரும் பிள்ளைகளின் மூளையில் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடும் பகுதியில் மின் கணத்தாக்கச் செயற்பாடுகளில் வேறுபாடு அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூளையின் prefrontal cortex பகுதியில் செயற்பாடு மந்தமாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக அவர்கள் பரிசோதனையின் போது சில வகை பார்வைத் தூண்டல்களை இனங்காணவோ அல்லது அவற்றைப் பெற்று கொண்டதன் பின்னான செயற்பாட்டைக் காட்டவோ இல்லை என்றும் அதுமட்டுமன்றி (prefrontal cortex) பகுதியால் வழங்கப்படும் மேலதிக உத்வேகத்தன்மை குறைவாகக் காணப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.அதேவேளை முன்னொரு ஆய்வில் வறுமைச் சூழலில் வளரும் பிள்ளைகள் மற்றவர்களைக் காட்டினும் குறைவாகப் பேசுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.இதற்காக வறுமைச் சூழலில் வாழும் பெற்றோரைக் குறை கூற முடியாது என்று கருத்துரைக்கும் ஆய்வாளர்கள் இந்த ஆய்வு முடிவுகள் குழந்தைகள் எதிர்காலத்தில் எவ்வாறான சூழலில் வளர்க்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை எடுத்துரைக்கின்றன என்றும் அதற்கேற்ற வகையில் குழந்தை வளர்ப்புத் திட்டங்களையும் வகுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.குழந்தைகள் வறுமைச் சூழலில் வாழ்வதால் அவர்கள் பெற்றுக் கொள்ளும் தகவல்/ தூண்டல்களின் அளவு குறைந்திருப்பதும், அழுத்தங்கள் மத்தியில் வாழ்வதால் மூளை முற்றான அபிவிருத்தியை காட்டத் தவறுவதுமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.இவற்றைத் தவிர்க்கும் வகையில் எதிர்காலத்தில் குழந்தைகளுக்குரிய சரியான வளர்ப்புச் சூழலை தீர்மானிக்க வேண்டியதுடன் வறுமைச் சூழலில் வளரும் குழந்தைகளுக்குச் சரியான பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர் ஆய்வாளர்கள்.இதைத்தான் தமிழ் புலவர் ஒளவையார் இளமையில் வறுமை கொடுமை என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டாரோ..
Publié par kajaneethan à 12:34 0 commentaires
பாலில் உருவாகும் பாக்டீரியா
பால் உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றது.பொதுவாக பாலை காய்ச்சி குடிப்பவர்கள் ஒருபுறம் என்றால்,வேறு சிலர் பச்சைப் பாலை (கறந்த பால்) அப்படியே குடிப்பார்கள்.ஆனால்,பச்சைப் பாலில் (raw milk) பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மிகக் குறைந்த வெப்பநிலையிலும், குளிர்வூட்டப்பட்ட போதிலும் இந்த பாக்டீரியா வளரக் கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மால்கா ஹால்பெர்ன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து பச்சைப் பாலில் பாக்டீரிய இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்தவகை பாக்டீரியாவை முன்னர் ஆய்வு செய்தவர்கள் வெளியிடவில்லை என்றும் டாக்டர் மால்கா குறிப்பிட்டுள்ளார்.கிறிசியோபாக்டீரியம் ஒரானிமென்ஸ் என்ற அந்த நுண்ணுயிரியானது குளிர்ந்த வெப்பநிலையிலும் கூட பாலில் பரவக்கூடியதாகத் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் பாலைக் காய்ச்சாமல் குடிப்பதால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.மாட்டில் இருந்து கறக்கப்படும் பாலானது பல்வேறு காரணங்களால் கெட்டுப் போகக்கூடும் என்பதால்,பாலை குளிரூட்டி பதப்படுத்துதலை பொதுவாக மேற்கொள்வார்கள். ஆனால்,குளிரூட்டப்பட்டாலும்,கிறிசியோபாக்டீரியம் காரணமாக பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
Publié par kajaneethan à 12:31 0 commentaires
புதிய எரிபொருள் கண்டுபிடிப்பு
இப்போது பெட்ரோல்,டீசலால் ஓடும் கார்கள் இனி வருங்காலத்தில் ஹைட்ரஜன் பந்துகள் மூலம் இயங்கும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.பூமிக்கடியில் இருந்து எடுக்கப்படும் பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருட்கள் இன்னும் குறிப்பிட்ட சில ஆண்டுகள்தான் கிடைக்கும். எனவே சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மாற்று எரிசக்தியை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.அந்த வகையில் சுவீடன் நாட்டில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தின் மெட்டிரீயல்ஸ் சயின்ஸ் துறையின் பேராசிரியர் லார்ஸ் ஸ்டென்மார்க் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய எரிபொருள் ஒன்றை உருவாக்கியுள்ளார்.அதன்படி ஹைட்ரஜன் வாயுவால் நிரப்பப்பட்ட சிறிய பந்துகளை கொண்டு கார்களை இயக்க முடியும் என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.அவருடைய இந்த கண்டுபிடிப்பு வர்த்தக ரீதியாக நடைமுறைக்கு வரும்போது தற்போது போக்குவரத்துக்கு பெட்ரோல்டீசலை பெரிதும் சார்ந்திருப்பது பெருமளவில் குறையும்.சிறிய பந்துகளில் ஹைட்ரஜன் வாயுவை நிரப்புவதன் மூலம் தீ விபத்து மற்றும் வெடி விபத்து போன்றவற்றை தவிர்க்க முடியும் என்று ஸ்டென்மார்க் தெரிவிக்கிறார்.வட்ட பந்து வடிவில் ஹைட்ரஜன் வாயுவை சேமித்து வைப்பதானது நீள உருளைகளில் சேமித்து வைப்பதைக் காட்டிலும் இரு மடங்கு அழுத்தத்தை தாங்கக்கூடியது.கார் புறப்பட்டதும் இந்த பந்துகள் உடைந்து அதில் நிரப்பப்பட்ட வாயு வெளியேறி கார் இயங்குவதுடன் எந்தவித தீங்கும் ஏற்படுத்தாமல் அந்த வாயு வளிமண்டலத்தில் கலந்து விடும் என்று அவர் தெரிவிக்கிறார்.பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் அவதிப்பட்டு வரும் மனித குலத்துக்கு இது போன்ற ஒரு நல்ல மாற்று எரிபொருள் தேவைதான்.விரைவில் இது நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு
Publié par kajaneethan à 12:28 0 commentaires
செல்போனில் அதிக நேரம் பேசுகிறீர்களா?
செல்போனில் அதிக நேரம் பேசுவதால், உடல் நலத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. இணைய தளம் ஒன்றில் வெளியான தகவலின் அடிப்படையில், செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மிகக் குறைந்த திறன் கொண்டதுதான் என்றாலும், அதிக நேரம் காதுகளில் வைத்து பேசிக் கொண்டிருப்பதால் ஏராளமான உபாதைகள் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது.செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால், மூளை நரம்புகள் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. தவிர எண்ணற்ற உடல் நலம் தொடர்பான நோய்களும் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றை மேற்கோள்காட்டி அந்த தகவல் கூறுகிறது.மேலும் கர்ப்பிணிப் பெண்கள் அதிக நேரம் செல்போனில் உரையாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு கதிர்வீச்சு தாக்குதல் இல்லாதவாறு பாதுகாத்துக் கொள்தல் அவசியம். அதில் செல்போன் கதிர்வீச்சும் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ள அந்த தகவல், தேவைப்பட்டால் மட்டும் கர்ப்பிணிப் பெண்கள் செல்போன்களில் பேசலாம் என்று தெரிவிக்கிறது
Publié par kajaneethan à 12:21 0 commentaires
பசியைப் பாதிக்கும் தீவிர உடற்பயிற்சி?
நீண்ட நேரம் தீவிரமாக உடற்பயிற்சி செய்வதால், பசியை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்கள் சுரப்பது பாதிக்கப்படலாம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பொதுவாக பசியை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்களாக க்ரலின் மற்றும் பெப்டைட் ஒய்ஒய் இரண்டும் அறியப்படுகிறது.அதிதீவிரமாக உடற்பயிற்சி செய்வதால் இந்த இரு ஹார்மோன்களும் பாதிப்புக்குள்ளாவதாகத் தெரிய வந்துள்ளது.ட்ரெட்மில் எனப்படும் சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சியை சுமார் ஒருமணி நேரம் மேற்கொள்வதால், இந்த ஹார்மோன்கள் சுரப்பது பாதிப்படையக் கூடும் என்றும், 90 நிமிட நேரம் பளுதூக்குதலில் ஈடுபடுவதால் க்ரலின் சுரப்பது பாதிக்கப்படுவதாகவும் வாஷிங்டனில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேரிடம் சுமார் 38 மணி நேரம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. முதலில் ஒருமணி நேரம் ட்ரெட்மில் பயிற்சியும், 7 மணி நேர ஓய்வுக்குப் பின் 90 நிமிட நேர பளுதூக்குதல் பயிற்சியும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மீண்டும் ஆறரை மணி நேர ஓய்வுக்குப் பின் உடற்பயிற்சி எதையும் செய்யாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதன் அடிப்படையில் மேற்கண்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.பல்வேறு நிலைகளில் அவர்களின் பசி குறித்து கேட்டறியப்பட்டது. உடற்பயிற்சியின் போது அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. க்ரலின் மற்றும் பெப்டைட் ஒய்ஒய் அளவு குறித்தும் பல்வேறு நிலைகளில் கேட்டறியப்பட்டது.பளு தூக்குதல் பயிற்சியைப் பொருத்தவரை இரு ஹார்மோன்களில் ஒன்று பாதிக்கப்படுவது தெரிய வந்ததாக அந்த ஆய்வு கூறுகிறது
Publié par kajaneethan à 12:16 0 commentaires